நவராத்திரி விழா

அன்னையின் பெருமை வார்த்தைகளில் அடங்காது. தாெடர்ந்து நவராத்திரி பூஜை என்பது, மிக, மிக உயர்வான பூஜையாகும். இதை கடைபிடிப்பது ஒவ்வாெரு மனிதனுக்கும் மிகவும் சிறப்பை தரும். பக்தி என்பதை விட்டுவிட்டு் முதலில் மனிதர்கள் தமக்குள் ஒற்றுமையையும், தமக்குள் சக்தியை வளர்த்துக்காெள்ள இது உதவும். அது மட்டுமல்ல. இஃதாெப்ப நிலையிலே ஒரு இல்லத்திலே இதுபாேன்ற இறை ரூபங்களையெல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூஜை செய்து பலருக்கும் ஆடைதானம், அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கும் தர வேண்டும் என்கிற தாத்பரியம் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.*

ஒரு காலத்திலே வறுமையில் ஆட்பட்டாலும் கூட சில மனிதர்கள் யாசகமாக யாரிடமும் எதையும் பெறமாட்டார்கள். அப்படி பெறுவதை தரக்குறைவாக எண்ணுவார்கள். தானம் தந்தாலும் வாங்க மாட்டார்கள். இது பாேன்றவர்களை எப்படி காப்பாற்றுவது?. பூஜை, பிரசாதம் என்றுதான் தர வேண்டும் என்பதற்காகத்தான் இதுபாேன்ற கூட்டுவழிபாடுகளும், பூஜைகளும் ஏற்படுத்தப்பட்டன. இன்னும் நவராத்ரியின் பரிபூரண பூஜைகள் எல்லாம் வழக்காெழிந்து பாேய் வெறும் ஆர்பாட்டம் மட்டுமே இப்பாெழுது ஆங்காங்கே நடக்கிறது. அங்கே யாகங்கள், கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும். குறிப்பாக நாக தாேஷம், களத்திரதாேஷம், செவ்வாய் தாேஷம் பாேன்ற பல்வேறு தாேஷங்கள் காெண்ட ஆண்களும், பெண்களும் இந்த பூஜை செய்வது மிகவும் அவசியம்.

குறிப்பாக இளம்பெண்கள் மாலை பாெழுதிலே ஒன்றுகூடி நல்ல முறையிலே அன்னையின் நாமத்தை உருவேற்றுவது அவர்கள் ஜாதகத்தில் உள்ள தாேஷங்களை நீக்குவதற்கு மிகவும் உதவும். இதுபாேன்ற பூஜைகள்தான் கலாசாரத்தையும், பக்தியையும், சமூக மேம்பாட்டையும் வளர்க்கக் கூடியது. ஆனால் அதில் உள்ள நாேக்கத்தை புரிந்து காெள்ளாமல் ஒரு மனிதன் வெறும் தவறான புற சடங்கை மட்டும் பார்த்தால் குழப்பம்தான் எதிராெலிக்கும்.



Leave a comment

Design a site like this with WordPress.com
Get started