குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் பின் தெரியாத விடயத்தை ஒன்று கூறுகின்றேன். பழனிதன்னில் ராகு கேதுக்கள் அங்கு சென்றாலே அக்கிரகங்களின் சில துன்பங்கள் அதி விரைவிலேயே ஈர்க்கும் அப்பா. அங்கு (அடிக்கடி) சென்று கொண்டிருந்தாலே பல துன்பங்கள் ஈர்த்துவிடும் என்பேன் அப்பனே. எளிதாக உயர்வு பெற்று விடலாம் என்பேன் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. எதற்காக அங்கு, அங்கு சென்று கொண்டு இருந்தாலே அப்பனே ஞானம் தித்தித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. அதனால் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றால் அப்பனே கஷ்டங்கள் அப்பனே அதை ராகு பின் கொடுக்கும் என்பேன் அப்பனே. அதனால் அதை கொடுத்து அப்பனே அங்கு சென்று கொண்டிருந்தாலே அனைத்து கர்மாக்களை எளிதில் ஈர்த்துக்கொள்ளும் என்பேன் அப்பனே. இதனால் வெற்றி உங்களுக்கே என்பேன் அப்பனே. அதனால் பழனி மலையின் சிறப்பு இதுதானப்பா. இன்னும் சொல்கின்றேன் வரும் காலங்களில் அப்பனே. பொறுத்திருந்தால் அப்பனே. ஒவ்வொன்றாக அதை பயன்படுத்திக் கொண்டால் வெற்றி வாழ்க்கையில். இல்லை என்றால் தோல்வி.
Leave a comment