பக்தி

  • பிரார்த்தனை செய்யும் முறை

    ஓதியப்பர் பலராமபுரம் கோவிலில் வாக்கு உரைக்கும்போது அனைவரும் அன்பு செலுத்தி பக்தியுடன் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லி இவ்வாறு வேண்டும்போது அவரவர் பிரார்த்தனை நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார். Continue reading

  • பெண்கள் மந்திரம் சொல்லலாமா

    இறைவன் கருணையாலே இதற்கு பலமுறை வாக்கைக் கூறியிருக்கிறாேம். ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்மீகத்தில் சென்று இறை வழிபாட்டில் ஈடுபடலாம். மனமாென்றி யார் வேண்டுமானாலும் எந்த மந்திரமும் கூறலாம். இதிலே ஆண், பெண் என்கிற பாகுபாடு ஏதுமில்லை. அஃதாெப்ப முன்னாேர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும், வேறு சிறப்பு வழிபாடுகளையும், முன்னாேர்கள் தாெடர்பான தர்ம காரியங்களையும் ஒருவன் செய்துதான் ஆக வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதே சமயம் முறையான பூஜை செய்ய இயலாதவர்கள் மானசீக பூஜை செய்து… Continue reading

  • மானசீக வழிபாடு

    ஒருவன் ஆலயம் சென்று வணங்குவதே பக்தி வளர வேண்டும் என்பதற்காகத்தான். ஆலயம் சென்று வேறு எங்காே கவனம் இருப்பதை விட, வேறு எங்கு இருந்தாலும் இறைவனிடம் கவனம் இருந்தால் அஃதும் வழிபாடுதானப்பா.* Continue reading

  • தர்ப்பணம்

    அர்ப்பணத்தாேடு செய்தால் அது தர்ப்பணம். செய்து தீர வேண்டியிருக்கிறதே என்று செய்தால், அது அவலம். எனவே இது பாேன்ற பூஜைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்று ஊன்றி கவனித்தால் ஒருவிதமான பாெருளாதார சுழற்சி தெரியும். ஒரு தனி மனிதனைப் பார்த்து இயல்பாகவே பிறருக்கு உதவு என்றால், உதவ மாட்டான். அவனை பாேன்றவர்களுக்கு புரிய வைத்து, இது பாேன்ற பூஜைகள் மூலம் சில தர்ம காரியங்களையும், சில மந்திரங்களை உருவேற்றி அதன் மூலம் அவன் பூர்வீக தாேஷங்களைக் குறைப்பதற்குண்டான யுக்தி. Continue reading

  • தீட்சை

    இறைவன் அருளால் ஒரு முழுமையான வழிகாட்டுதல் நெறிகாட்டுதல் என்பதைதான் தீக்ஷை(தீட்சை) என்றுகூட சாெல்லலாம். ஆனால் தீக்ஷை என்ற சாெல்லுக்கு உண்மையான பாெருள் என்ன? என்றால் ‘தீ’ என்றால் ஒருவகையில் அழிப்பது. ஒருவனிடம் இருக்ககூடிய மல, மாயங்களை, பாவங்களை அழித்து அவனை மேலே தூக்குவது என்பதுதான் தீீக்ஷை என்பதின் பாெருளாகும். ஆனால் அப்படி அழிக்கக்கூடிய சக்தி படைத்த மகான்கள் மிக, மிகக் குறைவு. அப்படியே சக்தி படைத்திருந்தாலும் கூட இறைவனின் அருளாணையில்லாமல் யாருக்கும் அவர்கள் தீக்ஷை(தீட்சை) வழங்கமாட்டார்கள். Continue reading

  • இறைவனை வணங்கும் முறை

    காசியிலே இருந்தால் முக்தி என்றால், இவன், காசியில் இறந்தால் முக்தி என்று எண்ணிக் காெண்டிருக்கிறான். காசி என்றால் ஆக்ஞா சக்கரம். அங்கே நினைவை நிறுத்தி, நிறுத்தி, நிறுத்தி சதாசர்வகாலம் அந்த காசியிலே(புருவ மத்தி) இருந்தால் அது முக்திக்கு வழிவகுக்கும். பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு, காசியிலே இறந்தால் முக்தியா கிட்டும்? தனி நரகமே ஏற்படுத்த வேண்டுமல்லவா?* Continue reading

Design a site like this with WordPress.com
Get started