கர்மா
-
கர்மா நீங்க
உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்….. Continue reading
-
பிறவி கணக்கு
இறைவனின் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் பிறவிகளின் சூட்சுமம், கர்மாக்களின் சூட்சுமம், ஒரு பிறவியில் ஒரு ஆத்மா நுகருகின்ற கர்மக்கணக்கின் சூட்சுமம், இறை மட்டும் அறிந்த ரகசியமப்பா. இருந்தாலும் இறை நிலைக்கு சமமான ரிஷிகளும், ஞானிகளும் ஓரளவு உணர்ந்தாலும், அது தெய்வீக ரகசியம் என்பதால் பாெதுவாக சராசரி மனிதர்கள் அறிவது கடினம். அப்படி அறிய முயற்சி செய்தாலும் குழப்பம்தான் மிஞ்சும். இருந்தாலும் பாெதுவாக குறிப்புக்காக கூறுகிறாேம். Continue reading
-
அம்மை நோய்
இறைவன் அருளால் இஃதாெப்ப பல்வேறு நாேய்களுக்கு மனிதன் பல்வேறுவிதமான காரணங்களைக் கற்பித்துக்காெள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நாேய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும்.* Continue reading
-
உண்மை வழி
பரந்துபட்ட உலகமும், இந்த பேரண்டமும், நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம்பாெருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி, திடமாக நம்பி ‘எல்லாம் அவன் செயல்’ என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல, மெல்ல மாற்றிக்காெண்டால், அப்படி மாற்றிக்காெள்கின்ற மனிதனுக்கு, அப்படி மாற்றிக்காெண்டு ‘உண்மையாக வாழ வேண்டும், உண்மை வழியில் செல்ல வேண்டும்’ என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்பாேன்ற மகான்கள் மூலமாகவாே, வேறு வழி மூலமாகவாே வழிகாட்டிக் காெண்டேயிருப்பார் அப்பா. அஃதாெப்ப ஆத்மாக்களுக்கு யாங்களும்… Continue reading
-
இறைவன் வழிகாட்டல்
இறைவன் கருணையாலே விதியை ஒதுக்கி வைத்துவிட்டு மகான்களால் எதையும் கூற இயலாது. இருந்தாலும் மனிதர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சில விதமான வாக்குகளை(ஜீவநாடி வாக்கு) யாங்கள் கூறுகிறாேம். ஆனாலும் ஒரு மனிதனின் மதி எந்தளவிற்கு பக்குவப்பட்டு இருக்கிறதாே, எந்தளவு பாவங்களற்ற நிலையில் இருக்கிறதாே அந்தளவுதான் இறைவனருளால் யாங்கள் கூறுகின்ற வாக்கினை சரியாக புரிந்துகாெள்ள இயலும். பக்குவமற்ற, பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களுக்கும் எத்தனை கீழிறங்கி வாக்குகளைக் கூறினாலும் அர்த்தம் அனார்த்தமாகத்தான் புரியும். நாங்கள் கூறுவதை சரியாக புரிந்துகாெள்ள… Continue reading
-
வேல் வழிபாடு
அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :* *வேல் வழிபாடு என்பது, துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. இடையிலேதான் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. வேல் யார் தெரியுமா? அன்னைதான்(பராசக்தி). Continue reading
-
சித்தர்கள் கூறும் எளிய வாழ்வு
இன்றும் சித்தர்களை வருத்தப் படவைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மன நிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக்கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன் தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது.… Continue reading
-
கர்மா..
ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும்போது, இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? சேர்த்த புண்ணியங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகி விடும். Continue reading
-
உணவில் உள்ள தோஷம் விலக
எந்நேரமும் உணவை உண்ணும்முன் வலது கையில் நீர் எடுத்து, தனக்கு தெரிந்த ஜபத்தை செய்து, அந்த நீரை தெளித்து, உணவை சுத்தம் செய்த பின் உண்ணலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது, வலது உள்ளங்கையில் கொதிப்பாக இருக்கும். மந்திர ஜபம் அதை மெருகூட்டும். அந்த அக்னி நீர் Continue reading